2024 ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில் வெண்கல விருது பெற்று ஜொலித்த Neptune Recyclers

மீள்சுழற்சி  தொடர்பான கழிவு முகாமைத்துவத்தில் இலங்கையின் முன்னணி நிறுவனமாக திகழும் Neptune Recyclers நிறுவனம், அண்மையில் இடம்பெற்ற 2024 ஜனாதிபதி சுற்றாடல் விருது நிகழ்வில் ‘Solid Waste Recovery/Recycling’ (திண்மக்கழிவு மீட்பு/ மீள்சுழற்சி) பிரிவில் வெண்கல விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையினால், 2024 ஜூன் 28 ஆம் திகதி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இடம்பெற்ற இந்த பெருமைக்குரிய நிகழ்வு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்கேற்புடன்  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் Neptune Recyclers நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் அப்துல்லாஹ் காசிம், Neptune Recyclers நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் ரிஷான் ஜௌபர், Neptune Recyclers நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி பஸ்லீன் மஜீத் ஆகியோர் நிறுவனத்தின் சார்பில் கலந்துகொண்டு விருதைப் பெற்றிருந்ததோடு, நிறுவனத்தின் விசேடத்துவம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தனர்.

இந்த விருது தொடர்பில் தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்த அப்துல்லாஹ் காசிம், “இந்த முக்கிய அங்கீகாரம் மூலம் நாம் மிகவும் பெருமையடைகிறோம். எமது நிர்வாகம் மற்றும் ஊழியர்களின் இடைவிடாத முயற்சிகளுக்கு இது ஒரு உண்மையான சான்றாகும். அவர்கள் அனைவரையும் இதற்காக நான் பாராட்டுகிறேன். நாம் எமது தேசத்தின் நிலைபேறான வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதோடு, இந்த சாதனையைக் கொண்டாடுவதற்கு எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். மிக முக்கியமாக எமது சூழலைப் பாதுகாப்பதில் தங்களது பங்களிப்பை வழங்குமாறு அவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.” என்றார்.

இலங்கையில் வட்டப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதில் Neptune Recyclers நிறுவனம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் மற்றும் சூழலைப் பாதுகாப்பதில் அந்நிறுவனம் கொண்டுள்ள ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு ஆகியன இந்த முக்கிய சாதனைக்குக் காரணமாகும். இந்நிறுவனம், 30 வருடங்களுக்கும் மேலாக, கழிவுகளை பெறுமதிவாய்ந்த பொருட்களாக மாற்றுவதன் மூலம் அக்கழிவுகளுக்கு புதிய வாழ்க்கையை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. எமது நாட்டிற்கு நிலைபேறான மற்றும் பொறுப்பான கழிவு முகாமைத்துவ அனுபவத்தை இது உறுதி செய்கிறது.

தொழிற்துறையில் 30 வருடங்களுக்கும் மேலாக முன்னோடியாக விளங்கும் Neptune Recyclers நிறுவனம், இன்று இலங்கையின் மீள்சுழற்சி மற்றும் கழிவு முகாமைத்துவத் துறையில் புத்தாக்கம் மற்றும் நிலைபேறான தன்மையின் தூணாக நிற்கின்றது. Ex-Pack Corrugated Cartons PLC இன் துணை நிறுவனமும், பிரபல Aberdeen Group இன் பெருமைக்குரிய உறுப்பு நிறுவனமுமான Neptune Recyclers நிறுவனம், கழிவுகளை பெறுமதி மிக்க வளங்களாக மாற்றுவதன் மூலம் பசுமையான, நிலைபேறான எதிர்காலத்தை மேம்படுத்துவதில் தொடர்ச்சியாக முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றது.

Share

You may also like...