வருடாந்த எசல திருவிழா காலப் பகுதியில், ‘சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காரய’ கருப்பொருளின் கீழ், 5 முக்கிய வரலாற்று சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்களை ஒளிரச் செய்த சுதேசி கொஹொம்ப

முன்னணி மூலிகை – தனிநபர் பராமரிப்பு பொருட்கள் உற்பத்தியாளரான Swadeshi Industrial Works PLC, வருடாந்த எசல திருவிழாவின் போது, அலுத்நுவர ஸ்ரீ தெடிமுண்ட மகா தேவாலயம், கண்டி ஶ்ரீ மஹா விஷ்ணு தேவாலயம், தெவுந்தர உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மஹா தேவாலயம், தெரணியகல சமன் தேவாலயம், ரிதீகம ரிதீ விகாரை ஆகிய ஐந்து முக்கியமான இடங்களை ‘சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காரய’ எனும் தொனிப்பொருளின் கீழ் மீண்டுமொருமுறை ஒளியூட்டி, ‘ஆலோக பூஜையை’ மேற்கொண்டது.
இது குறித்து சுதேசி நிறுவனத் தலைவி திருமதி அமரி விஜேவர்தன கருத்து வெளியிடுகையில், இலங்கைக்குச் சொந்தமான நிறுவனம் எனும் வகையில், இந்த வருடாந்த ஒளியூட்டும் பூஜை (‘ஆலோக பூஜா’) போன்ற செயற்பாடுகளுக்கு ஆதரவளித்து இலங்கையின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாப்பதை கடமையாக கருதுவதாக தெரிவித்தார்.
அனைத்து வழிபாட்டாளர்களின் நலனுக்காகவும், நாட்டின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி இளைய தலைமுறையினருக்கு விழிப்பூட்டுவதற்காகவும், நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்களை சுதேசி ஒளிரச் செய்கிறது என அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த ஒளியூட்டும் நிகழ்வைத் தொடர்ந்து இலங்கையின் பாரம்பரியங்கள் மற்றும் வரலாற்றை எடுத்துரைக்கும் வண்ணமயமான கலாசாரப் போட்டிகளும் இடம்பெற்றன.
அலுத்நுவர ஸ்ரீ தெடிமுண்ட மகா தேவாலயம், தம்பதெனிய காலத்தில் கட்டப்பட்டது. இரண்டாம் பராக்கிரமபாகு மன்னன் சிவனொளிபாதமலைக்குச் செல்லும் வழியில் அலுத்நுவர வழியாகச் சென்றபோது, அந்த இடத்தைக் கண்டு மிகவும் ஈர்க்கப்பட்டு, அந்த சொத்தை தேவாலயத்திற்கு தானம் செய்ய முடிவு செய்தார் என்று நம்பப்படுகிறது. கண்டி ஸ்ரீ மகா விஷ்ணு தேவாலயம், கண்டியில் உள்ள நான்கு முக்கிய விகாரைகளில் ஒன்றாகும். அரச மாளிகை (மகா வாசல) மற்றும் புனித தந்த தாது ஆலயம் (ஸ்ரீ தலதா மாளிகை) ஆகியவற்றுடன் நீண்டகால தொடர்பைக் கொண்டுள்ளது.
போர்த்துக்கேயர்களால் அழிக்கப்பட்ட, ஆரம்ப கால உத்பலாவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயம் கி.பி. 661 இல் தபுலுசன் மன்னனால் கட்டப்பட்டது. பௌத்த இலக்கியங்களின்படி, புத்தர் இறப்பதற்கு முன் இலங்கையில் பௌத்தத்தைப் பாதுகாக்குமாறு ‘சக்ரா’ கடவுளிடம் கேட்டிருந்தார். ‘சக்ரா’ கடவுள் இந்தக் கடமையை ‘உத்பலாவர்ண ஸ்ரீ விஷ்ணு’ கடவுளிடம் ஒப்படைத்தார்.
புராதன தெரணியகல சமன் தேவாலயம் இப்பிரதேசத்தின் பொக்கிஷமாகும். இந்த தேவாலயத்தின் புராணக்கதை 11ஆவது இராஜசிங்க மன்னரின் சகாப்தத்தைச் சேர்ந்தது. சுதேசியால் ஒளிரச் செய்யப்பட்ட ரிதீகம ரிதீ விகாரையின் வரலாறு அநுராதபுரம் யுகம் வரை நீண்டதாகும். துட்டகைமுனு மன்னனின் காலத்தில் ருவன்வலி மகா சாயவை நிர்மாணிக்க வெள்ளி எடுக்கப்பட்ட இடத்தை நினைவுகூரும் வகையில் ரிதீ விகாரை அமைக்கப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.
2013 ஆம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க புத்தரின் புனித தந்தம் வைக்கப்பட்டிருந்த தம்பதெனிய ரஜமஹா விகாரையின் ஸ்ரீ தலதா மாளிகையின் பழங்கால சுவரோவியங்கள் சுதேசியின் தலைவி திருமதி அமரி விஜேவர்தனவினால் புனரமைக்கப்பட்டது.
1927ஆம் ஆண்டு களனி ராஜ மகா விகாரையின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்த ஹெலனா விஜேவர்தன லமாதெனியின் கொள்ளுப் பேத்தியே திருமதி அமாரி விஜேவர்தன ஆவார்.
கதிர்காமம் கிரி விகாரை, ருஹுணு மஹா கதிர்காம தேவாலயம், லங்கா திலக ரஜ மஹா விகாரை, தம்பதெனிய ரஜ மகா விகாரை, சங்கபலி ரஜ மகா விகாரை, கொலம்பகம ரஜ மாக விகாரை, அத்தனகல ரஜ மகா விகாரை, கேரகல ரஜ மஹா விகாரை ஆகியவற்றின் வருடாந்த ஒளியூட்டும் ஆலோக பூஜைகளுக்கும் சுதேசி பங்களிப்பு செய்து வருகின்றது.
100% முழுமையான உள்ளூர் நிறுவனமான சுதேசி, இலங்கையிலுள்ள சமூகங்களுக்கான தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமூக பொறுப்புணர்வு திட்டங்களைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது. சுதேசி கொஹொம்ப ஆனது, இயற்கை அன்னையை பராமரித்தல், கலாசார விழுமியங்களை மேம்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தி, நிலைபேறான திட்டங்களை நிறைவேற்றுதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளது. ‘சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காரய’ ‘சுதேசி கொஹொம்ப மிஹிந்தலா சத்காரய’ உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள ஆலயங்களின் வருடாந்த ஒளியேற்றல் நிகழ்வுகள், வேம்பு மர நடும் பிரசாரங்கள், இலங்கையில் வரட்சியான பகுதிகளில் உள்ள சமூகங்களுக்கும், பாடசாலைகள், விகாரைகளுக்கு நீர்த் தொட்டிகளை நன்கொடையாக வழங்குதல், கொஹொம்ப பேபி பராமரிப்பு பொருட்களை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள், சுதேசி நிறுவனம் முன்னெடுக்கும் சமூக நலன் சார்ந்த முயற்சிகளாக குறிப்பிடலாம்.
“இலங்கையின் முன்னணி மூலிகை தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகளின் உற்பத்தி நிறுவனம் எனும் வகையில், சுதேசியாகிய நாம் எமது அனைத்து தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படும் மூலிகைப் பொருட்களின் செயற்பாட்டு நன்மைகள் தொடர்பில் நுகர்வோர் மேலும் அறிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறோம். நாம் இலங்கையின் சிறந்த மூலிகைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம் என்பதுடன், பயன்படுத்தப்படும் அனைத்து மூலப்பொருட்களும் விரிவாக ஆய்வுக்குள்ளாக்கப்படுகின்றன. தயாரிப்புகளின் தரத்தை உறுதி செய்வதற்காக முழுமையாக சோதனைக்கு உள்ளாக்கப்படுவதுடன், எமது தயாரிப்புகள் யாவும் 100% சைவத்தை அடிப்படையாகக் கொண்டவையுமாகும். அவை விலங்குகள் மீது சோதிக்கப்படவில்லை என்பதுடன் விலங்குகளின் கொடுமைகளிலிருந்து விலக்கற்றவை. சுதேசி கொஹொம்ப மற்றும் ராணி சந்தனம், கொஹொம்ப பேபி ஆகியன இங்கிலாந்தின் Vegetarian Society, UK யின் அங்கீகாரம் பெற்றவையாகும்.” இந்த உறுதிமொழியானது, நிறுவனத்தின் முன்னோக்கிய சிந்தனை நடைமுறைகளுக்கும், நுகர்வோருக்கு நெறிமுறை ரீதியானதும் சூழல் நட்புரீதியானதுமான தெரிவுகளை மேற்கொள்ளவும் உதவும் என நாம் எதிர்பார்க்கிறோம். நிறுவனம் எப்போதும் தனது தயாரிப்புகளின் ஆரோக்கியம் மற்றும் சூழல் தாக்கத்தை கருத்தில் கொண்டு, தொடர்ந்தும் அவற்றிற்கு முன்னுரிமையளிக்கின்றது. உண்மையான இலங்கை நிறுவனமான சுதேஷி, கடந்த 80 வருடங்களில் தொழில்துறையில் முந்திக் கொண்டு தனது பெயரில் பல்வேறு முதலாவது சாதனை உரிமை கோரல்களுக்கு உரித்துடையதாக திகழ்கின்றது.
இலங்கையிலுள்ள மூலிகை கொண்ட தனிநபர் பராமரிப்பு பிரிவில் முன்னோடியும் சந்தையின் முன்னணி நிறுவனமுமான Swadeshi Industrial Works PLC நிறுவனம் 1941 இல் கூட்டிணைக்கப்பட்டது. சுதேசியின் முன்னணி வர்த்தகநாமங்களில் சுதேசி கொஹொம்ப, ராணி சந்தனம், சுதேசி கொஹொம்ப பேபி, பேர்ல்வைட், லக் பார், சேஃப்ப்ளஸ், பிளக் ஈகிள் பேர்ஃப்யூம், கொஹொம்ப ஹேண்ட் வொஷ், கொஹொம்ப பொடி வொஷ், ராணி ஷவர் கிறீம் ஆகியன உள்ளடங்குகின்றன. சுதேசி நிறுவனம், இலங்கையில் முதலிடத்திலுள்ள மூலிகை வர்த்தகநாமமான ‘கொஹொம்ப ஹேர்பல்’ மற்றும் பாரம்பரிய அழகு வர்த்தகநாமமான ராணி சந்தனம் ஆகியவற்றை தயாரித்து சந்தைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. அனைத்து சுதேசி தயாரிப்புகளும் இலங்கையின் சுகாதார அமைச்சின் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுதேசி தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அனைத்து வாசனைத் திரவியங்களும் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச வாசனை சங்கத்தினால் (IFRA) சான்றளிக்கப்பட்டுள்ளதுடன், ISO 9001 – 2015 தரச் சான்றிதழின் அடிப்படையில் அவை தயாரிக்கப்படுகின்றன.
Recent Comments