DIMO Healthcare, இலங்கையில் முதன்முறையாக Echosens FibroScan® Expert 630 கருவியை வத்தளை Hemas Hospital இல் அறிமுகப்படுத்தியுள்து

இலங்கையின் சுகாதார சேவைகள் துறையில் முன்னணியில் உள்ள DIMO Healthcare நிறுவனம், ஈரல் தொடர்பான நோய்களை கண்டறிவதில் புரட்சியை ஏற்படுத்தும் Echosens FibroScan® Expert 630 கருவியை இலங்கையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. உலகத் தரம் வாய்ந்ததாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த நவீன தொழில்நுட்பம், ஈரல் நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியவும், உடனடியான கண்காணிப்பின் மூலம் அதற்கான சிகிச்சை வழங்க உதவுவதன் மூலம், நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சையுடனான சேவைகளை வழங்குவதை உறுதி செய்கிறது.

உலகத் தரமான இந்த நவீன தொழில்நுட்பம் ஈரல் நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியவும், நோயறிதலைத் தொடர்ந்தான கண்காணிப்பையும் மேம்படுத்தவும் உதவுகின்றது. இதன் வாயிலாக நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்கப்படும்.

இலங்கையின் முதலாவது Echosens FibroScan® Expert 630 கருவியானது DIMO Healthcare நிறுவனத்தால் வத்தளை Hemas Hospitalஇன் புதிய ஈரல் பரிசோதனை மையத்தில் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையில் DIMO Healthcare நிறுவனம் உருவாக்கியுள்ள உயர் மதிப்பு மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளின் தரம் காரணமாக, Hemas Hospitals ஆனது இந்த உபகரணத்தை நிறுவுவதற்காக, DIMO Healthcare நிறுவனத்தை தெரிவு செய்துள்ளது.

இது குறித்து Hemas Hospitals மருத்துவ சேவைகள் மற்றும் தர நிர்வாக பணிப்பாளர் வைத்தியர் மலித் அத்தபத்து தெரிவிக்கையில், “இலங்கையில் முதன்முறையாக Echosens FibroScan® Expert 630 கருவியை அறிமுகப்படுத்திய சுகாதார சேவையாயாளர் எனும் பெயரை பெறுவது பெருமை அளிக்கிறது. இது எமது ஈரல் சிகிச்சைகளுக்கான சேவைகளின் முக்கிய முன்னேற்றமாகும். இந்த அறிமுகமானது, வத்தளை Hemas Hospital இல் விசேடத்துவமான ஈரல் மையம் ஒன்றை நிறுவும் எமது தூரநோக்கத்திற்கு ஆதரவளிப்பதோடு, எமது சிகிச்சை சேவைகளை விரிவுபடுத்தும் திறனையும் வழங்குகிறது.” என்றார்.

ஹேமாஸ் மருத்துவமனையின் பணிப்பாளரும் அதன் பொதுச் செயலாளருமான பிரபான் குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “இந்த நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக, உயர் தரமான ஈரல் பரிசோதனைகளை நோய் ஆபத்து கொண்ட மக்களுக்கு மிக எளிதாக பெறும் வகையில், உயர் தரத்திலான ஈரல் தொடர்பான சுகாதார மதிப்பீடுகளை வழங்குவது எமது நோக்கமாகும்.” என்றார்.

DIMO Healthcare நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி பிரியந்த திசாநாயக்க இது பற்றிக் குறிப்பிடுகையில், “இந்த நவீன தொழில்நுட்பத்தை இலங்கைக்கு கொண்டு வர முடிந்தமை தொடர்பில் நாம் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம். சுகாதார சேவை நிபுணர்களுக்கு துல்லியமான மற்றும் சரியான நேரத்திலான ஈரல் சுகாதார மதிப்பீடுகளை வழங்க Echosens FibroScan® Expert 630 கருவி உதவுகின்றது. இலங்கையில் உள்ள ஒரேயொரு Echosens நிறுவனத்தின் பிரதிநிதி எனும் வகையில், நாம் நம்பகமான விற்பனைக்குப் பிந்தைய சேவையை உறுதி செய்கிறோம். இலங்கையர்களின் கனவுகளையும் ஆசைகளையும் வலுப்படுத்தும் சுகாதாரமிக்க நாடொன்றை கட்டியெழுப்பும் எமது அர்ப்பணிப்பு இதன் ஊடாக வெளிப்படுத்தப்படுகிறது.” என்றார்.

FibroScan® Expert 630 போன்ற நவீன கருவிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், நாடு முழுவதும் உள்ள சுகாதார நிபுணர்கள் தொடர்ச்சியான ஆய்வு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட உதவுவதோடு, இலங்கையின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதில் மிகப் பாரிய பங்களிப்பையும் வழங்குகிறது.

உலகத் தரத்திலான சுகாதாரத் தீர்வுகளை வழங்குவதில் நற்பெயரைக் கொண்டுள்ள DIMO Healthcare நிறுவனம், நாடு முழுவதும் உள்ள சுகாதார சேவையயாளர்களின் நம்பிக்கைக்குரிய பங்காளி எனும் தன்னுடைய நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

Share

You may also like...